Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

தீபாவளிக்குப் பொருட்கள் வாங்க திண்டுக்கல் நகரில் குவிந்த மக்கள்

தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் பொருட்களை வாங்க கிராமப்புற மக்கள் அதிக அளவில் நேற்று குவிந்தனர்.

திண்டுக்கல் நகரில் தீபாவளியை முன்னிட்டு சாலையோர தற்காலிகக் கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்த விலையில் துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தீபாவளிக்கு பொருட்களை வாங்க திண்டுக்கல் சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்கள் நேற்று அதிக அளவில் வந்ததால் திண்டுக்கல் நகரில் கூட்டம் அலைமோதியது. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக கூட்டம் காரணமாக கடைவீதி பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருட்டுக் குற்றங்களை தடுக்க கூடுதல் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தீபாவளிக்கு முதல்நாளான இன்று பொருட்களை வாங்க வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x