ராமநாதபுரம் காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் விருது

ராமநாதபுரம் காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் விருது
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 காவல் ஆய்வாளர்கள், ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆகியோருக்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையில் 25 ஆண்டுகள் குற்றச்சாட்டுகள் இன்றியும், சிறப்பாகவும் பணியாற்றிய போலீஸாருக்கு ஆண்டுதோறும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ‘அதி உத்கிருஷ்ட சேவா படக்’ என்ற விருது வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி தனி ஆயுதப் படை ஆய்வாளர் மோகன்குமார், ராமநாதபுரம் ஆயுதப்படை ஆய்வாளர் முத்துராமலிங்கம், மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் அர்ஜூனன் ஆகியோர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in