மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்

Published on

கிருஷ்ணகிரியில் தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்ட 8 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். அவர்களில் 4 மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீம் ரூ.4 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், முடநீக்கியல் வல்லுநர் பிரகாஷ், எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர் தியாகராஜன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in