சிறப்பு திட்டத்தில் பட்டா வழங்க ஆய்வுக்கூட்டம்

சிறப்பு திட்டத்தில் பட்டா வழங்க ஆய்வுக்கூட்டம்
Updated on
1 min read

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஒருமுறை சிறப்புத்திட்டத்தின் கீழ் பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அண்ணா துரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பங்களில் தகுதியான குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கிடும் ஒருமுறை சிறப்புத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை வரும் 30-ம் தேதிக்குள் வட்டாட்சியர்கள் முடித்திடவேண்டும். அனைத்து குறுவட்டங்களுக்கும் மண்டல அலுவலர்களை நியமனம் செய்து பணிகளை விரைந்து முடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் சரஸ்வதி, சார் ஆட்சியர் டாக்டர் அனு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in