சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய டிராக்டர் ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய டிராக்டர் ஓட்டுநருக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை
Updated on
1 min read

சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய டிராக்டர் ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்(40), டிராக்டர் ஓட்டுநரான இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துகொண்ட பாஸ்கர், திருப்பூரில் 2 ஆண்டுகள் அந்தச் சிறுமியுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைக்குழந்தையுடன் திரும்பிய அந்தச் சிறுமி, தன்னை பாஸ்கர் ஏமாற்றிவிட்டதாக திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு, மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் கூடுதலாக 5 மாத சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in