வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று பாஜகவினர் மறியலில் ஈடுபட்டபோது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று பாஜகவினர் மறியலில் ஈடுபட்டபோது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Updated on
1 min read

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டங்கள் நடத்தினர். திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் கணேசமூர்த்தி, தமிழ்ச்செல்வன், சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி

தென்காசி

குமரியில் 573 பேர் கைது

அங்கிருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமையில், மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் டிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அங்கு மறியல் நடைபெற்றது. போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், 124 பெண்கள் உட்பட 573 பேர் கைது செய்யப் பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in