Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

திருக்கண்டலத்தில் அடிக்கடி மின்வெட்டுமின்சார வாரிய அலுவலகம் முற்றுகை

இந்த குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மின்சார வாரிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் பலனில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தனித்தனியாக 3 மின் மாற்றிகளை அமைக்கக் கோரி நேற்று கன்னிகைப்பேரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மின்சார வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, "3 மாதங்களுக்குள் திருக்கண்டலம் ஊராட்சி பகுதிகளில் 3 மின் மாற்றிகளை அமைத்து மின் வெட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என, அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, சுமார் 2 மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னதாக, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த பொதுமக்களில் பலர், முகக்கவசம் அணியாமல் வந்தனர். அவர்களுக்கு, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட வந்த பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ், தன் சொந்த செலவில் முகக்கவசங்கள் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x