சேலத்தில் பாஜக-வினர் 8 பேர் கைது

சேலத்தில் பாஜக-வினர்  8 பேர் கைது
Updated on
1 min read

சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த பாஜக-வினர் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மாலை பாஜக மாநகர் மாவட்ட எஸ்ஸி, எஸ்டி பிரிவு துணைத் தலைவர் ஆதிகேசவன் தலைமையில் 7 பேர் வந்தனர். அவர்கள் பிரதமர் மோடியின் உருவப்படம் மற்றும் சுத்தியல், ஆணி ஆகியவற்றை கையில் வைத்திருந்தனர். அரசு விதிகளின்படி ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக கடந்த 29-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொ டுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்த மனு மீது நடவடிக்கை இல்லாததால், பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஆட்சியர் அலுவலகத்தில் மாட்ட வந்ததாக கூறினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், கரோனா பரவல் தடுப்பு விதிகளின்படி சட்ட விரோதமாக ஒன்றாக வந்தது தொடர்பாக 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in