Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கோயில் தெருவைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் லிங்கராஜா (33). இவரை ஒரு கொலைவழக்கில் ஆறுமுகநேரி போலீஸார் கடந்த 05.10.2020 அன்றும்,குரும்பூர் ராஜபதியைச் சேர்ந்தரூபன் மகன் முத்துக்குமார் (29)என்பவரை கொலை முற்சி வழக்கில் ஏரல் போலீஸார் கடந்த 05.09.2020 அன்றும் கைது செய்தனர்.

கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த இம்மானுவேல் ராஜா (43) என்பவரை கோவில்பட்டி கிழக்கு போலீஸார் நகை பறிப்பு வழக்கில் கைது செய்த னர். இவர்கள் மூவரையும் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக் குமார் பரிந்துரை செய்தார். ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x