கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்
Updated on
1 min read

மேலப்பாளையத்தில் உள்ள விரிவாக்க பகுதியான பிஎஸ்என்எல் நகரைச் சேர்ந்த பாதுஷா மகன் அப்துல் வாகிப் (11). இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தனியாருக்கு சொந்தமான இடத்திலுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

இதுகுறித்து மேலப் பாளையம் போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in