தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீஸார் 109 பேர் தாலுகா காவலர்களாக நியமனம் எஸ்பி தலைமையில் கலந்தாய்வு

தூத்துக்குடியில் ஆயுதப்படை   போலீஸார் 109 பேர் தாலுகா காவலர்களாக நியமனம் எஸ்பி தலைமையில் கலந்தாய்வு
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்களை, தாலுகா காவலர்களாக பணி மாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 109 காவலர்கள், தாலுகா காவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் காவலர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அலுவலகத்தில் நடை பெற்றது.

எஸ்.பி.ஜெயக்குமார் தலைமை யில், ஏஎஸ்பிக்கள் கோபி, செல்வன், டிஎஸ்பி கண்ணபிரான், அமைச்சுப்பணி காவல்துறை அலுவலக கண்காணிப் பாளர்கள் மயில்குமார், கணேசபெருமாள் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்தாய்வை நடத்தி, காவலர் கள் விருப்பப்பட்ட காவல் நிலையங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.

கலந்தாய்வு மூலம் தூத்துக்குடி துணை கோட்டத்துக்கு 8 காவலர்கள், தூத்துக்குடி ஊரகத்துக்கு 15 பேர், மணியாச்சிக்கு 14 பேர், கோவில்பட்டிக்கு 22 பேர், சாத்தான்குளத்துக்கு 11 பேர், வைகுண்டத்துக்கு 9 பேர், திருச்செந்தூருக்கு 15 பேர், விளாத்திகுளத்துக்கு 15 பேர் என மொத்தம் 109 காவலர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in