Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்திமதுரையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை: தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில் கிரைம் பிராஞ்ச் சம்பளக் கணக்கு அலுவலகம் அருகே எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை கிரைம் பிராஞ்ச் அருகே ஆர்ப்பாட்டம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தமிழக மக்களின் உணர்வுகள் மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை இறையாண்மையை மதிக்காமல் தொடர்ந்து தமிழர் விரோதப் போக்கோடு செயல்படும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்றார். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேசினார். இதில், திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவர் இப்ராஹீம், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் கமால் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய தொகுதி தலைவர் ஆரிப்கான் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x