Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
இதுகுறித்து மதுரை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ஜா.பிரீடா பத்மினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விவசாய மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரம் இன்று (நவ.1) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை மின் பகிர்மான வட்டம், கிழக்கு, திருமங்கலம், சமயநல்லூர், உசிலம்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு பகல் நேரங்களில், குரூப் 1 பகுதிகளுக்கு காலை 9 முதல் மாலை 3 வரையிலும், குரூப் 2 பகுதிகளுக்கு காலை 9.30 முதல் மாலை 3.30 வரையிலும் மும்முனை மின் விநியோகம் வழங்கப்படும். இரவு நேர மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT