Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் நியமனத்தில் விதிமீறல் இல்லை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர், உறுப்பி னர்கள் நியமனத்தில் எந்த விதி மீறலும் நடைபெறவில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரி வித்துள்ளது.

தமிழக லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் நிய மனத்தை ரத்து செய்யக்கோரி மதுரை எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்றக் கிளையில் கடந்தாண்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக லோக் ஆயுக்தா தலைவர், சட்டப் பேரவைத் தலைவர், தலைமைச் செயலர் மற்றும் பொதுத்துறை முதன்மை செயலர் தரப்பில் துணைச் செயலர் பி.ஆர்.கண்ணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு 2014-ல் சட்டம் அமல்படுத்தியது. அதன்படி தமி ழகத்தில் 2018-ல் லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்பட்டது.

லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் 2 உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தமிழக முதல் வர், சட்டப் பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட தேர்வுக் குழு அமைக் கப்பட்டது. அக்குழு கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்புக் கடிதம் அனுப் பப்பட்டது. ஆனால், கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என அவர் பதில் கடிதம் அனுப்பினார்.

இதனால் பெரும்பாலான உறுப் பினர்களின் முடிவு அடிப்படையில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அதையேற்று லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் 2 நீதித் துறை உறுப் பினர்களையும், 2 நீதித் துறை சாரா உறுப்பினர்களையும் ஆளு நர் நியமித்தார். இதில் நீதித் துறை சாரா உறுப்பினர்கள் நியமனத்துக்கு எதிராக உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்று நீதித்துறை சாரா உறுப்பினர்கள் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.

நீதிபதி தேவதாஸ் தலைமை யிலான தமிழக லோக் ஆயுக்தா அமைப்பு சுதந்திரமாக நடைபெற்று வருகிறது. விதிப்படியே லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x