Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

திண்டிவனம் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்அருப்புக்கோட்டையை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதி அருப்புக் கோட்டையைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வேல்பாண்டியன் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்னை வேளச்சேரியில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். பின் னர் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

திண்டிவனத்தை அடுத்த கன்னிகாபுரம் அருகே காலை 5மணியளவில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த அருப்புக்கோட் டையைச் சேர்ந்த முருகேசன் மகன் கவுதம்(28) , முருகேசன் மனைவி சுப்புலட்சுமி(50), வேல்பாண்டியன்(37) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த முருகேசன்(56) , முத்து மனைவி பேச்சியம்மாள் (55), சேகர் மனைவி ஜெயந்தி(60), வேல் பாண்டியன் மனைவி லட்சுமிபிரியா(27) வேல் பாண்டியன் குழந்தைகள் கமலினி (3), அருள்சுனை யாழினி (5) ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.

இவர்களில் ஜெயந்தி நேற்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாலையில் பேச்சி யம்மாள் உயிரிழந்தார்.

மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கன்டெய்னர் லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்த சீனுவாசன்(40) என்பவரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x