Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

விதைப் பண்ணை அமைக்க ஆலோசனை

சிவகங்கை மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சாந்தி கூறியதாவது: விதைப் பண்ணை அமைக்க உளுந்து பயிரில் வம்பன் 6, வம்பன் 9, வம்பன் 10 ஆகிய ரகங்களை பயன்படுத்தலாம். ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது. வயது 65 முதல் 70 நாட்கள். விதைக்கும்போது தலா ஒரு பாக்கெட் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாவை, 200 கிராம் ஆறிய வடிகஞ்சி யுடன் கலந்து, அதில் 8 கிலோ விதையைக் கொட்டி நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும்.

விதைப் பண்ணை அமைக்க விரும்புவோர் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x