Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

மதுரை செந்தமிழ் கல்லூரியில் கருத்தரங்கு :

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் செந்தமிழ்க் கல்லூரியில் எழுத்தாளர் ப.சிங்காரம் நூற்றாண்டு கருத்தரங்கம் நடந்தது.

முன்னாள் பேராசிரியர் தி.சு. நடராஜன் தலைமை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) வேணுகா வரவேற்றார். கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவர் செல்லா முன்னிலை வகித்தார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினார்.

காந்தி கிராமிய பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனந்தகுமார் எழுதிய "தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீள் வாசிப்பு, தனிநாயக அடிகளார் ஒப்பிலக்கிய சிந்தனைகள்" ஆகிய 2 நூல்கள் வெளியிடப்பட்டன.

பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நான்காம் தமிழ் சங்கச் செயலர் மாரியப்பமுரளி பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x