Published : 17 Dec 2021 03:08 AM
Last Updated : 17 Dec 2021 03:08 AM

பாலியல் வன்கொடுமை வழக்கில் ​இளைஞருக்கு 10 ஆண்டு சிறை :

விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவழங்குடி பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ்(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 26.10.2016-ல் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ராமதாஸ், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கருவுற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் ராமதாஸ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று ராமதாஸூக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் இச்சம்பவத்தில் அந்தப் பெண்ணை மிரட்டிய ராமதாஸின் தந்தை காசிலிங்கம், தாய் ராயம்மா ஆகியோருக்கு தலா ரூ.4 ஆயிரம், அக்கா சரஸ்வதி, அண்ணன்கள் குப்புசாமி, பழனிவேல், தங்கை விஜயலட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞராக க. செல்வபிரியா ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x