காவல்துறை ஆய்வாளரிடம்   நகை பறித்த இளைஞர் கைது :

காவல்துறை ஆய்வாளரிடம் நகை பறித்த இளைஞர் கைது :

Published on

கியூ பிரான்ச் காவல் ஆய்வாளரிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 12.5 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் புனிதா (43). இவர், திருப்பத்தூர் மாவட்டத்தில் கியூ பிரான்ச் பிரிவில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பணி முடிந்து தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவர் அணிந்திருந்த ஏழரை பவுன் தங்கத் தாலி சரடை மர்மநபர் பறித்துச் சென்றார்.

இது குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த அசாருதீன்(29) என்பரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 12.5 பவுன் தங்க நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in