Published : 16 Dec 2021 03:07 AM
Last Updated : 16 Dec 2021 03:07 AM

விழுப்புரத்தில் - சிறுவன் மர்ம மரணம் :

விழுப்புரத்தில் அடையாளம் தெரியாத சிறுவன் மர்மான முறையில் இறந்து கிடந்தான்.

விழுப்புரம் மேலத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் நேற்று காலை 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் இறந்து கிடந்தான்.

அச்சிறுவன் யார் என அடையாளம் தெரியவில்லை. தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சிறுவன் நீல நிற டீஷர்ட்டும், வெள்ளை, ரோஸ் கலந்த கால் சட்டையும் அணிந்திருந்தான்.

இச்சிறுவனைப்பற்றி தகவல்தெரிந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரி விக்குமாறு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x