Published : 15 Dec 2021 03:07 AM
Last Updated : 15 Dec 2021 03:07 AM

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு : அரை மணி நேரம் மட்டுமே குளிக்க அனுமதி :

கோவை குற்றாலத்தில் நேற்று குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

கோவை: கோவையில் இருந்து 25 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கோவை குற்றாலத்துக்கு, கோவை மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் கோவை குற்றாலத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், தற்போது நீர்வரத்து மிதமாக இருப்பதால் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறும்போது, “கோவை குற்றாலத்தில் தினமும் 600 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். முதல்நாளில் 530 பேர் வருகை புரிந்தனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, நான்கு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவினரும் அரை மணி நேரம் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கோவை குற்றாலத்துக்கு வர விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x