தாளவாடி அருகே புலி உயிரிழப்பு வனத்துறை விசாரணை :

தாளவாடி அருகே ஜீரஹல்லி வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட புலி.
தாளவாடி அருகே ஜீரஹல்லி வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட புலி.
Updated on
1 min read

தாளவாடி அருகே ஜீரஹல்லி வனப்பகுதியில் புலி உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட 10 வனச்சரகங்களில் புலி, யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், ஜீரஹல்லி வனச்சரகத்திற்குட்பட்ட அக்கூர்ஜோரை வனப்பகுதியில் உள்ள ஓடையில் புலி ஒன்று இறந்து கிடப்பதைக் கண்ட விவசாயிகள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஜீரஹல்லி வனச்சரகர் ராமலிங்கம் தலைமையிலான வனத்துறையினர், புலியின் உடலை மீட்டனர். 3 வயதான இப்புலியின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இறந்த புலியின் உடலை, தேசிய புலிகள் பாதுகாப்பு குழும விதிமுறைகளின் படி உடற்கூராய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித் துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in