நிவாரணம் வழங்க வலியுறுத்தி - சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 	படம்:  எஸ். குரு பிரசாத்
மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ். குரு பிரசாத்
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். தலைவர் சின்னதம்பி, பொருளாளர் மாரியப்பன், துணைச் செயலாளர்கள் பாலன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

‘குறுவை சாகுபடி அறுவடை பணி நடைபெற இருந்த நிலையில், மழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. எனவே, பாதிப்படைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். எதிர்வரும் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்களை தட்டுப்பாடின்றி வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in