Published : 15 Dec 2021 03:09 AM
Last Updated : 15 Dec 2021 03:09 AM

தகராறில் மனைவியை கொன்றவர் கைது :

நாகப்பட்டினம்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பைச் சேர்ந்தவர் செல்லத்துரை(30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி இந்துமதி(26). கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த ஆய்மழை மேலத்தெருவில் வசிக்கும் தனது தங்கையின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இந்துமதி வந்துள்ளார். அங்கு சென்ற செல்லத்துரை அன்று இரவு குடிபோதையில் வந்து, இந்துமதியிடம் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து, நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த செல்லத்துரை அம்மிக்கல்லால் இந்துமதியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இந்துமதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேளாங்கண்ணி போலீஸார், விரைந்து வந்து இந்துமதியின் சடலத்தை நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x