மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் மாற்றுத் திறனாளிகளுக்கு 17-ல் நேர்முக தேர்வு :

மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் மாற்றுத் திறனாளிகளுக்கு 17-ல் நேர்முக தேர்வு  :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளி கள் தேர்வு நடைபெறவுள்ளது.

இந்த தேர்வு வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெறும். இதில் 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண், பெண்கள் பங்கேற்கலாம். நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் உரிய சான்றுகளை கொண்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை மற்றும் பிற அரசு துறைகள் மூலம் ஏற்கெனவே தையல் இயந்திரங்கள் பெற்றிருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது என கிருஷ்ண கிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in