Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

உயிரிழந்த துப்புரவு தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் கோரி - விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா :

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணா.

விருதுநகர்

சாத்தூர் மேல காந்தி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(32). இவர் சாத்தூர் நகராட்சி துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார். அக்டோபர் 9-ம் தேதி கழிவு நீர் வாய்க்காலில் விழுந்து இறந்தார்.

இந்நிலையில், கழிவு நீர் வாய்க்காலை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி இறந்ததாகவும், குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரியும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அவரது தாய் தங்கம்மாள் மற்றும் உறவினர்கள், வன வேங்கை கட்சியினர் தர்ணா செய்தனர்.

இவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கம்மாள் உள்ளிட்டோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x