போடியில் - பூச்சிக்கொல்லி மருந்தின் நெடி தாக்கி தொழிலாளி மரணம் :

போடியில்  -  பூச்சிக்கொல்லி மருந்தின் நெடி தாக்கி தொழிலாளி மரணம் :
Updated on
1 min read

தேனி மாவட்டம், போடி கோணாம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அழகர்(60). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் ஜங்கால்பட்டியில் உள்ள பருத்திச் செடிகளுக்கு கடந்த 5-ம் தேதி பூச்சி மருந்து தெளித்துள்ளார். இதன் நெடி தாங்காமல் வயிற்றுவலி ஏற்பட்டு மயங்கினார். 108 ஆம்புலன்ஸ் மூலம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வீரபாண்டி சார்பு ஆய்வாளர் லதா விசாரிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in