காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் இன்று லட்சதீபம் விழா :

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்  இன்று லட்சதீபம் விழா :
Updated on
1 min read

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் கார்த்திகை மாத சோமவார நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். மேலும், கடைசி சோமவார நாளில் லட்சதீப விழா நடைபெறும். இந்தாண்டுக்கான லட்சதீப விழா இன்று (டிச.13-ம் தேதி) நடைபெற உள்ளது. அப்போது, கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு தீப ஒளியால் மின்ன உள்ளது.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில், சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும். மேலும், 1,008 சங்குகளால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in