பாஜக சார்பில் போராட்டம்  :

பாஜக சார்பில் போராட்டம் :

Published on

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாளையங்கோட்டையில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் மகாராஜன், நிர்வாகிகள் கணேசமூர்த்தி, சுரேஷ், அருள்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலையில் மார்க்கெட் சந்திப்பு அருகேயுள்ள பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் பி.எம்.பால்ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டியிருந்தனர்.

பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், மான்சிங், மாவட்ட பொதுச்செயலாளர் வி.எஸ்.ஆர். பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in