Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM

எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம் :

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பகுதி தலைவர் ரிபாயி தலைமை வகித்தார். வார்டு தலைவர் சதாம் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கனி சிறப்புரையாற்றினார். சுத்தமல்லி பகுதி துணைத் தலைவராக இபுராஹிம் , செயலாளராக ஜாஹிர் ஹுசைன், பொருளாளராக பீர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், “சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும். இதற்கு கூடுதல் பணியாளர்கள், வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு அபராத தொகையை அதிகப்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x