Published : 13 Dec 2021 03:09 AM
Last Updated : 13 Dec 2021 03:09 AM

திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் மார்கழித் திருவிழா கொடியேற்றம் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவாலய ஓட்டம் நடைபெறும் பன்னிரு சிவாலயங்களில் 2-வது சிவா லயமான திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் மார்கழி திருவிழா நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

திருக்கொடியை தந்திரி வேணுகோபால் ஏற்றி வைத்தார். வரும் 21-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், புஷ்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 16-ம் தேதி நந்தி ஊட்டு பிரதோஷம், 20-ம் தேதி பள்ளிவேட்டை எழுந்தருளல், 21-ம் தேதி தாமிரபரணி படித்துறையில் ஆறாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. மார்கழி திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் மற்றும் கேரள எல்லை பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x