Published : 12 Dec 2021 03:09 AM
Last Updated : 12 Dec 2021 03:09 AM

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் :

கிருஷ்ணகிரி

கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலகம் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நமது தேசத்துக்கு நற் பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் மத நல்லிணக்கத்துக்காகவும், சமுதாய ஒற்றுமைக் காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. தகுதிகளின் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதல் பிரிவில் ரூ.20 ஆயிரம், 2-ம் பிரிவில் ரூ.10 ஆயிரம், 3-ம் பிரிவில் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான கபீர்புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இன்று (12-ம் தேதி) மாலை 5 மணிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x