தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு : தேனி கல்லூரி மாணவி தேர்வு :

தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி ராகவிக்கு பாராட்டு தெரிவித்த கல்லூரி நிர்வாகத்தினர்.
தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி ராகவிக்கு பாராட்டு தெரிவித்த கல்லூரி நிர்வாகத்தினர்.
Updated on
1 min read

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறையைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி வி.ராகவி 60 - 63 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்றார். இதன் மூலம் பஞ்சாபில் நடைபெற உள்ள தேசிய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார்.

இவரை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் எம்.பழனியப்பன், கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு, இணைச் செயலாளர் ஏ.ராஜ்குமார், முதல்வர் சி.மதளைசுந்தரம், துணை முதல்வர் என்.மாதவன், வேலைவாய்ப்பு அலுவலர் என்.கார்த்திகேயன், உடற்கல்வி இயக்குநர்கள் கே.சுந்தரராஜன், பி.செல்வக்குமார், ஆர்.மாலினி ஆகியோர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in