நாட்டாண்மைகொட்டாய் அரசுப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் :

நாட்டாண்மைகொட்டாய் அரசுப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அடுத்த நாட்டாண்மை கொட்டாய் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தொடக்க விழா நடந்தது.

கிருஷ்ணகிரி அடுத்த நாட்டாண்மை கொட்டாய் அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தொடக்க விழா நடந்தது. இவ்விழாவுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை வகித்தார்.

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பொன்னி முன்னிலை வகித்தார்.

இதில் ஊராட்சித் தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பின்னர், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்று, இல்லம் தேடிக் கல்வி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர். முடிவில், உதவி தலைமை ஆசிரியர் அருள்குமார் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in