Published : 11 Dec 2021 03:09 AM
Last Updated : 11 Dec 2021 03:09 AM

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு `சீல்' :

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் நகராட்சி பராமரிப்பில் இருந்து வருகிறது. பேருந்து நிலைய வளாகத்தில், 35-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் சில கடைகள் பல மாதங்களாக வாடகை பணம் செலுத்தவில்லை. இதுதொடர்பாக நகராட்சி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை கட்டாத 3 கடைகளை நகராட்சி ஊழியர் கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.

இதுகுறித்து நகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் வாடகை நிலுவை தொகையை செலுத்தக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும், கடை எண்.32 -ல் ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 941-ம், கடை எண்.19-ல் ரூ.1 லட்சத்து 77ஆயிரத்து 188-ம், கடை எண்.22 – ல் ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 610-ம்- வாடகை தொகை செலுத்தவில்லை. இதனால் அக்கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மேலும், குத்தகைதாரர்கள், வரி விதிப்புதாரர்கள் தங்களின் நிலுவைத் தொகையினை உடனடியாக நகராட்சிக்கு செலுத்தி இதுபோன்ற நடவடிக்கையினை தவிர்த்துக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x