Published : 11 Dec 2021 03:10 AM
Last Updated : 11 Dec 2021 03:10 AM

திருவள்ளூர் கிளைச் சிறையில் - கைதி தற்கொலை முயற்சி :

திருவள்ளூர் கிளைச் சிறையில் விசாரணை கைதி ஒருவர் சில்வர் டம்ளரால் கழுத்தை அறுத்து, தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர்- கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன்(46). இவர், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 6-ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அன்று பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பட்டாபிராம் போலீஸார் திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பிரபாகரன் நேற்று காலை சிறை வளாகத்தில் குடிநீர் வழங்கும் சில்வர் டம்ளரை கூராக்கி தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, சிறை அதிகாரிகள் பிரபாகரனை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பிரபாகரன், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x