சுரேஷ் அகாடமியில் படித்த 30 பேர் வங்கிப் பணிக்கு தேர்வு :

சுரேஷ் அகாடமியில் படித்த  30 பேர் வங்கிப் பணிக்கு தேர்வு :
Updated on
1 min read

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் படித்து வங்கிப் பணிக்கு தேர்வான 30 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பாரத ஸ்டேட் வங்கி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் படித்த 30 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா, தூத்துக்குடியில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்றது.

டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். தேர்வில் வெற்றி பெற்ற 30 பேரும் போட்டித் தேர்வுக்கு தயாரான தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அகாடமியின் வங்கிப் பணி ஒருங்கிணைப்பாளர் ராஜா, ஆசிரியர் அந்தோணி பட்டுராஜ் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in