இ-சேவை மைய கட்டிடம் திறப்பு :

இ-சேவை மைய கட்டிடம் திறப்பு :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இ- சேவை மைய கட்டிடத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ரூ.19.64 லட்சம் செலவில் கட்டப்பட்ட சீர்காட்சி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர், செட்டியாபத்து ஊராட்சி தாங்கியூரில் மியாவாக்கி காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்து, தண்ணீர் தொட்டியை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கோகிலா, வட்டாட்சியர் சுவாமிநாதன், காயல்பட்டினம் நகராட்சிஆணையர் சுகந்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in