பாறையை தகர்க்க வெடி வைப்பு - கற்கள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு :

பாறையை தகர்க்க வெடி வைப்பு     -  கற்கள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு :
Updated on
1 min read

செங்கம் அருகே விவசாய நிலத்தில் இருந்த பாறையை தகர்க்க நேற்று வைக்கப்பட்ட வெடிகள் வெடித்து கற்கள் சிதறி விழுந்ததில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி கிராமத்தில் திருப்பதிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பாறை கற்களை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக, தீத்தாண்டபட்டு கிராமத்தில் தோட்டா வைக்கும் வாகனத்தை வரவழைத்து, பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்கும் பணி நடைபெற்றது. இதற்காக, பாறையில் 7 வெடிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை குறித்த நேரத்துக்கு வெடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், பாறை தகர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீத்தாண்டப்பட்டு கிராமத்தில் வசித்த கூலி தொழிலாளி சுகன்(35) என்பவர் வெடியை பார்வையிட பாறை அருகே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல், பாறையில் வைத்திருந்த வெடிகள் வெடித்துள்ளன. இதில், கற்கள் சிதறி விழுந்ததில் கூலி தொழிலாளி சுகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மேல்செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in