Published : 08 Dec 2021 04:09 AM
Last Updated : 08 Dec 2021 04:09 AM

தேனி பொறியியல் கல்லூரியில் - மாணவர்களுக்கு பணி நியமன ஆணை :

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி நியமன ஆணை பெற்ற மாணவ, மாணவியர்.

தேனி

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சென்னை லெப்ரக்ஸ் நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.

நிறுவனத்தின் பொது மேலாளர்கள் கே.கோடீஸ்வரன், கே.பிரகாஷ், வி.ராஜேஷ்கண்ணா, உற்பத்தி மேலாளர் ஏ.ஜெய் கணேஷ் ஆகியோர் தேர்வுகளை நடத்தினர். இதில் கட்டிடவியல், இயந்திரவியல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு, இணைச்செயலாளர் ஏ.ராஜ்குமார், முதல்வர் சி.மதளைசுந்தரம் ஆகியோர் வழங்கினர். உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச் செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் பழனி யப்பன் ஆகியோர் பாராட்டினர்.

வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், துணை முதல்வர் மாதவன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x