வெள்ளத்தில் சிக்கிய பள்ளி வேன் மீட்பு :

வெள்ளத்தில் சிக்கிய பள்ளி வேனை மீட்ட செய்யாமங்கலம் கிராம மக்கள்
வெள்ளத்தில் சிக்கிய பள்ளி வேனை மீட்ட செய்யாமங்கலம் கிராம மக்கள்
Updated on
1 min read

கமுதி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளி வேனை கிராம மக்கள் மீட்டனர்.

கமுதி அருகே செய்யாமங்கலம் கிராமத்தில் செய்யாமங்கலம்-கொடுமலூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் கடந்த 10 நாட்களாக வைகையாற்றில் இருந்து பரளையாறு கால்வாய் மூலம் வரும் தண்ணீர் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது. இதனால் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்ல வருவாய், போலீஸார் தடை விதித்துள்ளனர். தண்ணீர் வரத்து சற்று குறைவாகக் காணப்பட்டதால் தனியார் பள்ளி வேன் ஒன்று தரைப்பாலத்தை நேற்று கடக்க முயன்றது. அப்போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் பள்ளி வேன் வெள்ளத்தில் சிக்கியது.

இதனால் வேனில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அலறினர். இந்த சப்தம் கேட்டு அருகில் இருந்த செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ஆண்கள் உடனடியாக தண்ணீரில் சிக்கிய வேனை மீட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in