Published : 08 Dec 2021 04:09 AM
Last Updated : 08 Dec 2021 04:09 AM

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை :

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள ஒத்தக்கடையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கலைவேந்தன். இவரது மனைவி அமுதா. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த துரைப்பாண்டி(33) என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. இதை கலைவேந்தன் கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த துரைப் பாண்டி 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கலைவேந்தனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில், துரைப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x