Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

போலீஸ் வாகனம் மோதி - ரோடு ரோலர் டிரைவர் பலி :

தூத்துக்குடியில் போலீஸ் வாகனம் மோதி ரோடு ரோலர் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி பங்களா தெருவை சேர்ந்தவர்முத்துசெல்வம் (63). இவர், தனியார் நிறுவனத்தில் ரோடு ரோலர் டிரைவராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலையில் தூத்துக்குடியில் இருந்து திருவிக. நகர் அருகே மோட்டார் சைக்கிளில் இவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் போலீஸ் மினி லாரி வந்து கொண்டிருந்தது.

எதிர்பாராதவிதமாக அந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துசெல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த காவலர் ராஜபாண்டி மீது தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x