Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் டிச.10-ல் 200 இடங்களில் போராட்டம் :

புதுக்கோட்டை

பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சிஐடியு, விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் உள்ளிட்ட சங்கத்தின் சார்பில் டிச.10-ம் தேதி மாநிலம் தழுவிய வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இப்போராட்டத்தை விளக்கி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், குன்றாண்டார்கோவில் பகுதியில் நேற்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

அங்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர் கூறியபோது ‘‘மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் டிச.10-ம் தேதி 200 இடங்களில் சாலையில் செல்லும் வாக னங்களை 10 நிமிடம் நிறுத்தி போராட்டம் நடத்தப்பட உள்ளது. புதுக்கோட்டை நகரில் சுமார் 30 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x