Published : 07 Dec 2021 03:07 AM
Last Updated : 07 Dec 2021 03:07 AM

ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது :

கோவையை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வருவாய் ஆய்வாளராக உள்ளார். கிராவல் மண் எடுத்துச்செல்லும் வாகனத்தை இயக்குவது தொடர்பாக, ரூ. 30 ஆயிரத்தை ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. தொடர்புடைய நபர் பேரம் பேசியதில் ரூ. 25 ஆயிரம் தருமாறு செந்தில்குமார் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத அந்நபர், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தல்படி, ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, வருவாய் ஆய்வாளரிடம் அந்நபர் கொடுத்துள்ளார். அப்போது கையும், களவு

மாக செந்தில்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x