தூத்துக்குடியில் 4 கடைகளில் திருட்டு :

தூத்துக்குடியில் 4 கடைகளில் திருட்டு :
Updated on
1 min read

தூத்துக்குடியில் ஒரேநாளில் அடுத்தடுத்து 4 கடைகளில் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி எட்டயபுரம் சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள லாரிபுக்கிங் அலுவலகம், ஜெராக்ஸ் கடை, ஆயத்த ஆடை கடை உள்ளிட்ட 4 கடைகளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளர்கள், கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க 3 இளைஞர்கள் கடைகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in