குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக - புதுவை முன்னாள் அமைச்சர் மருமகன் உள்பட 3 பேரிடம் ரூ.6.30 கோடி மோசடி : 4 பேரிடம் போலீஸார் விசாரணை

குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக -  புதுவை முன்னாள் அமைச்சர் மருமகன் உள்பட 3 பேரிடம் ரூ.6.30 கோடி மோசடி :  4 பேரிடம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக புதுச்சேரி முன்னாள் அமைச் சரின் மருமகன் உள்பட 3 பேரிடம் ரூ.6 கோடியே 30 லட்சம் மோசடி செய்ததாக 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவின் அலெக்க்சாண்டர் (31). இவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனாவார். இவரது நண்பர்கள் கவுதம் (29) மற்றும் கணேஷ் குமார். கவுதம் ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்றின் டீலராகவும், கணேஷ் குமார் பாதாம், பிஸ்தா மொத்த வியாபாரமும் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு புளியந்தோப்பைச் சேர்ந்த பாலாஜி என்பவரது நட்பு ஏற்பட்டுள்ளது. பாலாஜி தங்கம், வெள்ளி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை பில் இல்லா மல் விற்பனை செய்து வந்ததாக கூறப் படுகிறது.

இவர் சுங்கத்துறை அதிகாரிகள் பலர் தனக்கு தெரியும் என அனைவரிடமும் தெரிவித்து வந்துள்ளார். இவர் பல கோடி ரூபாய் தங்கம் தன்னிடம் உள்ளதாகவும், தேவைப்பட்டால் அதை குறைந்த விலையில் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பி பிரவின் அலெக்சாண்டர் உள்பட 3 பேரும் ரூ.6 கோடியே 30 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.

இதை பெற்றுக் கொண்ட பாலாஜி உறுதி அளித்தபடி தங்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பணத் தையும் திருப்பி கொடுக்கவில்லையாம். இதனால், அதிர்ச்சி அடைந்த 3 பேரும் இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, பாலாஜி உள்பட 4 பேரை பிடித்து பெரியமேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in