Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM

பாலியல் புகாரில் சிக்கியோருக்கு ஜாமீன் அளித்தால் போராட்டம் : முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி எச்சரிக்கை

பாலியல் புகாரில் சிக்கியவர்களுக்கு ஜாமீன் அளித்தால் நீதிமன்றம் முன் போராட்டம் நடத்துவோம் என்று முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: திண்டுக்கல்லில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாளா ளருக்கு தற்போது ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்திருக்கிறது. பாலியல் புகாரில் சிக்கியோருக்கு ஜாமீன் கொடுப்பது ஏற்புடையது அல்ல.

இது ஒரு சமூகப் பிரச்சினை. இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். நர்சிங் கல்லூரி தாளாளருக்கு மற்றொரு வழக்கில் திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கக் கூடாது.

பாலியல் புகாரில் சிக்குவோ ருக்கு எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பு வழங்கக்கூடாது. அதையும் மீறி ஜாமீன் கொடுத்தால் நாங்கள் நீதிமன்றங்களுக்கு எதிராக போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x