இலங்கை கடற்படையால்  : ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு :

இலங்கை கடற்படையால் : ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு :

Published on

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் கச்சத்தீவு அருகே நேற்று முன்தினம் பகலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்து, அங்கிருந்து ராமேசுவரம் மீனவர்களை விரட்டி அடித்தனர்.

அதனால் அச்சமடைந்த ராமேசுவரம் மீனவர்கள் வேறு பகுதிக்குச் சென்றனர். ஒரு சிலர் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் ராமேசுவரத்துக்கு திரும்பினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in