Published : 06 Dec 2021 03:09 AM
Last Updated : 06 Dec 2021 03:09 AM

சாத்தான்குளம் அருகே ஆடுகளை கடித்ததால் - நாயை கொன்ற 2 பேர் கைது :

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே தெரு நாயை கம்பால் அடித்துக் கொன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம் பகுதியில் 3 பேர் சேர்ந்து தெரு நாயை கம்பால் தாக்கி, கொல்லும் காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைப் பார்த்த விலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த வீடியோ காட்சி குறித்த விவரம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து நாயை அடித்துக் கொன்ற 3 பேரையும் உடனே கைது செய்யுமாறு சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜுவுக்கு அவர் உத்தரவிட்டார், டிஎஸ்பி மேற்பார்வையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அதில், சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளம் வடக்குத் தெருவை சேர்ந்த இ. சுந்தரம் என்ற தாஸ் (30) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள தெரு நாய் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரும், நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சு.இசக்கிமுத்து என்ற கோட்டை (37) மற்றும் ப.குமார் (32) ஆகிய 3 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் பேய்க்குளம் முசலைக்குளம் பகுதியில் வைத்து அந்த நாயை கம்பு மற்றும் கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்தது. சுந்தரம் என்ற தாஸ் மற்றும் இசக்கிமுத்து ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x